எங்களுடைய குருநாதர் ஸ்வாமிஜி ஞானானந்த மஹராஜின் பொற்பாதங்களை வணங்கி ஒவ்வொரு ஜீவனும் விடுதலைக்காக பயணிக்கும் அப்படிப்பட்ட அன்பர்களுக்கு இந்த இணையதளத்தை சமர்ப்பிக்கிறோம் .இந்த வெப்சைட் சொல்ல கூடிய சாராம்சம் தேடுதலில் இருப்பவர்கள் தேடுபவரை பார்த்தால் அப்படி ஒரு நபர் உங்களில் கிடையாது .இருப்பது வெறுமை (emptiness) மட்டுமே .இதை தெரிந்த மாத்திரத்தில் தெரிபவன் இல்லை இருப்பது மட்டுமே . அப்படி இருப்பதை ஆத்மா என்று பெயர் கொடுத்தால் கூட இதை பற்றி பேசுபவன் வந்துடுவான் எனவே எதுவும் இல்லை என்ற சொல் கூட கிடையாது . இந்த இணையத்தளமூலம் 13-ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த மராட்டிய தத்துவஞானி மற்றும் யோகி ஆவார் ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ் (1275–1296). இவர் மௌலி (அம்மா) என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். வர்காரி (Varkari) பக்தி இயக்கத்தின் முக்கிய தூணாகக் கருதப்படும் இவர், வெறும் 21 வயதில் ஆளந்தியில் ஜீவசமாதி அடைந்தார். 


இந்த வெப்சைட் சொல்லக் கூடிய சாராம்சம்: தேடுதலில் இருப்பவர்கள் தேடுபவரைப் பார்த்தால், அப்படி ஒரு நபர் உங்களில் கிடையாது. இருப்பது வெறுமை (emptiness) மட்டுமே. இதைத் தெரிந்த மாத்திரத்தில் தெரிபவன் இல்லை; இருப்பது மட்டுமே. அப்படி இருப்பதை "ஆத்மா" என்று பெயர் கொடுத்தால் கூட, இதைப் பற்றி பேசுபவன் வந்து விடுவான். எனவே, "எதுவும் இல்லை" என்ற சொல் கூட கிடையாது.

Guru Gnanananda Maharaj

ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ் (1275–1296)

இந்த இணையத்தளமூலம் 13-ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த மராட்டிய தத்துவஞானி மற்றும் யோகி ஆவார் ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ். இவர் மௌலி (அம்மா) என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். வர்காரி (Varkari) பக்தி இயக்கத்தின் முக்கிய தூணாகக் கருதப்படும் இவர், வெறும் 21 வயதில் ஆளந்தியில் ஜீவசமாதி அடைந்தார்.

காலம் & பிறப்பு:பொ.ஊ. 1275 இல், மகாராஷ்டிராவின் பைத்தன் அருகே கோதாவரி நதிக்கரையில் உள்ள ஆபேகாவ் என்ற இடத்தில் Deshastha Brahmin குடும்பத்தில் பிறந்தார்.
பெற்றோர்:தந்தை விட்டல்பந்த் (Vitthalpant) மற்றும் தாய் ருக்மிணி (Rukmini).
குரு:ஞானேஸ்வரின் மூத்த சகோதரர் நிவ்ருத்திநாத் (Nivrithinath) தான் இவருக்கு குரு.
படைப்புகள்:பகவத் கீதையின் தத்துவத்தை சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், மராத்திய மொழியில் "ஞானேஸ்வரி" (Dnyaneshwari - Bhavarthadeepika) என்ற நூலை 15 வயதில் எழுதினார். இதுதவிர, அம்ருதானுபவ், சாங்தேவ் பாசாஷ்டி, ஹரிபாத் (Abhangas) ஆகியவற்றை இயற்றியுள்ளார்.
சமாதி:1296 இல் ஆளந்தி (Alandi) என்னும் இடத்தில், பூனே அருகில், ஜீவசமாதி அடைந்தார்.
அற்புதங்கள்:சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது, இதில் சாங்கதேவர் (Changdev) என்ற யோகியின் கர்வத்தை அடக்கியதும், எருமையை வேதம் ஓத வைத்ததும் முக்கியமானவை.
சிறப்புகள்:ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ் நினைவாக நமது மத்திய அரசாங்கம் 1999 ஆம் ஆண்டு Sant Dnyaneshwar Rs.100 Rs.1 (UNC SET) மற்றும் ஒரு ரூபாய் நாணயம் வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் 12101 ஞானேஸ்வரி விரைவு ரயில் மும்பை to கொல்கத்தா செல்லும் தொடர்வண்டி இயங்குகிறது. இதையும் இணையத்தளத்தில் பார்க்கலாம். இவ்வளவு சிறப்பு பொருந்திய மகான் ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ் என்பதை அறியலாம்.
Loading Sacred Texts...
Loading Wisdom...
Loading Enlightenment...
Loading Truth...